மணமேல்குடி ஒன்றியத்தில் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம்




மணமேல்குடி ஒன்றியத்தில் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. 

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி  வட்டார வளமையத்தில் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் வட்டார கல்வி அலுவலர் திரு செழியன் அவர்களின் தலைமையில் தொடங்கியது.  வட்டார கல்வி அலுவலர் மதிப்புரிய திரு அமுதா  மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்நிகழ்வில் எமிஸ் ல் ஆசிரியர் மற்றும் மாணவர் வருகைப் பதிவு 100% செய்தல் வேண்டும் என்றும், எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கையேடு பெற்ற விவரம் எமிஸ்-ல் பதிவு செய்தல் வேண்டும் என்றும்,

பள்ளிச் செல்லா குழந்தைகள் பற்றிய விவரங்கள் பதிவு செய்தலின் அவசர அவசியம் குறித்தும், புதிய பாரத எழுத்தறிவுத்திட்ட செயல்பாடுகள் குறித்தும் 
ஹைடெக் பயிற்றுநர் பணி சார்ந்த தகவல் குறித்தும் பேசப்பட்டது. காலைவழிபாட்டுக் கூட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்ளுதல் சார்ந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆசிரியர்கள்             மற்றும் மாணவர்கள் வருகைப்பதிவு செய்தலின் முக்கியத்துவம் குறித்த தகவல், சத்துணவு SMS முற்பகல்10.30 க்குள் 100% அனுப்புதல் வேண்டும் என்றும்,
  SC, MBC உதவித்தொகை கேட்புப்பட்டியல் உடன் அனுப்புதல்  வேண்டும் என்றும், அலுவலகத்தில் கேட்கப்படும் புள்ளி விவரங்களை உடனுக்குடன் அனுப்புதல் வேண்டும் என்றும், இணையம் இணைப்பு சார்ந்த தகவல், பாடநூல் இருப்பு மற்றும் தேவை விவரம் சார்ந்த தகவல், உங்களைத்தேடி திட்டம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

 கண்காணிப்புக்குழு பள்ளிப்பார்வை செய்தல்  Hi- tech சார்ந்த தகவல் கொடுக்கப்பட்டது. நிதிஉதவி பெறும் பள்ளியில் காலைச்சிற்றுண்டி , BSNL இணைய இணைப்பு சார்ந்து தலைமை ஆசிரியர திரு நா.மதியழகன் அவர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

நிகழ்வில் என்ன தேதி கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு கண்ணன் மற்றும் அனைத்து தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments