மணமேல்குடி ஒன்றியத்தில் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி வட்டார வளமையத்தில் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் வட்டார கல்வி அலுவலர் திரு செழியன் அவர்களின் தலைமையில் தொடங்கியது. வட்டார கல்வி அலுவலர் மதிப்புரிய திரு அமுதா மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் எமிஸ் ல் ஆசிரியர் மற்றும் மாணவர் வருகைப் பதிவு 100% செய்தல் வேண்டும் என்றும், எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கையேடு பெற்ற விவரம் எமிஸ்-ல் பதிவு செய்தல் வேண்டும் என்றும்,
பள்ளிச் செல்லா குழந்தைகள் பற்றிய விவரங்கள் பதிவு செய்தலின் அவசர அவசியம் குறித்தும், புதிய பாரத எழுத்தறிவுத்திட்ட செயல்பாடுகள் குறித்தும்
ஹைடெக் பயிற்றுநர் பணி சார்ந்த தகவல் குறித்தும் பேசப்பட்டது. காலைவழிபாட்டுக் கூட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்ளுதல் சார்ந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகைப்பதிவு செய்தலின் முக்கியத்துவம் குறித்த தகவல், சத்துணவு SMS முற்பகல்10.30 க்குள் 100% அனுப்புதல் வேண்டும் என்றும்,
SC, MBC உதவித்தொகை கேட்புப்பட்டியல் உடன் அனுப்புதல் வேண்டும் என்றும், அலுவலகத்தில் கேட்கப்படும் புள்ளி விவரங்களை உடனுக்குடன் அனுப்புதல் வேண்டும் என்றும், இணையம் இணைப்பு சார்ந்த தகவல், பாடநூல் இருப்பு மற்றும் தேவை விவரம் சார்ந்த தகவல், உங்களைத்தேடி திட்டம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
கண்காணிப்புக்குழு பள்ளிப்பார்வை செய்தல் Hi- tech சார்ந்த தகவல் கொடுக்கப்பட்டது. நிதிஉதவி பெறும் பள்ளியில் காலைச்சிற்றுண்டி , BSNL இணைய இணைப்பு சார்ந்து தலைமை ஆசிரியர திரு நா.மதியழகன் அவர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
நிகழ்வில் என்ன தேதி கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு கண்ணன் மற்றும் அனைத்து தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.