தொண்டி அருகே சிக்கிய கடல் பசுக்களை வலையை அறுத்து விடுவித்த மீனவர்கள்




வலையில் சிக்கிய கடல் பசுக்களை வலையை அறுத்து மீனவர்கள் கடலில் விட்டனர்.

கடல் பசுக்கள்

தொண்டி அருகே உள்ள நம்புதாளையைச் சேர்ந்த மீனவர்கள் பிச்சை, வரதன், அடையாள வேலு, பெரியசாமி ஆகியோர் ஒரு படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் அனைவரும் வலையை விரித்து நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது இவர்களது வலையில் தாய், குட்டி என 2 கடல் பசுக்கள் சிக்கின.

இதுகுறித்து மீனவர்கள் தொண்டி கடற்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து தொண்டி மரைன் போலீசார் கடல் பசுவை பிடிக்க கூடாது என்றும் உடனடியாக வலையை அறுத்து கடல் பசுவை உயிருடன் கடலுக்குள் விட வேண்டும் என அறிவுரை வழங்கினர்.

வலைகளை அறுத்து

இந்நிலையில் மீனவர்களின் வலையில் சிக்கிய தாய் கடல்பசு தானாகவே விடுவித்துக் கொண்ட நிலையில், வலையில் சிக்கியிருந்த சுமார் 80 கிலோ எடை கொண்ட குட்டி கடல் பசுவை மட்டும் மீனவர்கள் தங்களது வலைகளை அறுத்து கடலுக்குள் விட்டனர். மீனவர்களின் இச்செயலை கடல் பசு பாதுகாப்பு ஆர்வலர்கள் மற்றும் மீன் துறையினர் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பெரிதும் பாராட்டினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments