பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் ரெயில் என்ஜினை இயக்கி நேற்று சோதனை நடத்தப்பட்டது. இதில் கோட்ட மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ராமேசுவரம் வரை சென்றனர்.
ரூ.545 கோடியில் புதிய பாலம்
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடி நிதியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றது. சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு கடலுக்குள் கட்டப்பட்டுள்ள இந்த புதிய ரெயில் பாலத்தின் மையப் பகுதியில் செங்குத்து வடிவில் தூக்குப்பாலம் பொருத்தப்பட்டு அதை திறந்து மூடுவதற்கான சாதனங்களை பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த ரெயில் பாலத்தை அடுத்த மாதம் (அக்டோபர்) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
ரெயில் என்ஜின் சோதனை
இந்த நிலையில் மதுரை ெரயில்வே கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீ வத்சவா மற்றும் ரெயில்வே திட்ட கட்டுமான அதிகாரி பத்மநாபன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று சிறப்பு ரெயில் என்ஜின் மூலம் மண்டபம் வந்தனர். தொடர்ந்து மண்டபத்தில் இருந்து புறப்பட்ட அந்த என்ஜினில் ஏறிக்ெகாண்டனர். பாம்பன் புதிய ரெயில் பாலம் வழியாக இந்த என்ஜின் 20 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது.
பாலத்தின் நடுவில் உள்ள தூக்குப்பாலத்தை கடந்ததும் சற்று தூரத்தில் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் ரெயில்வே கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீ வத்சவா உள்ளிட்ட அதிகாரிகள் இறங்கி தூக்குப்பாலத்தையும், அதை திறந்து மூட பொருத்திய சாதனங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
விரைவில் பயன்பாட்டுக்கு வரும்
பின்னர் மதுரை கோட்ட மேலாளர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாம்பன் கடலில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரெயில்வே பாலம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது. அதுபோல் ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம், பயணிகளுக்கு தேவையான பல்வேறு வசதிகளுடன் கூடிய கட்டிடங்கள் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. விரைவில் பாம்பன் புதிய பாலத்தில் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. ராமேசுவரம் வரை வழக்கம் போல் ரெயில்கள் இயக்கப்படும். புதிய ரெயில் பாலத்தில் போக்குவரத்து தொடங்கும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
பழைய தூக்குப்பாலத்தை அகற்றி வேறு ஒரு இடத்தில் நினைவுச்சின்னமாக வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மிகவும் பாதுகாப்பாக அந்த தூக்குப்பாலத்தை அகற்றுவதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய ரெயில் பாலம் வழியாக நேற்று முதன்முறையாக ராமேசுவரம் வரை அதிகாரிகளுடன் ரெயில் என்ஜின் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பாம்பன் ரோடு பாலத்தில் நின்றபடி ஏராளமானோர் இந்த சோதனையை பார்த்து ரசித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.