புதுக்கோட்டை மாநகராட்சியில் தூய்மை பாரத இயக்கம் (நகர்ப்புறம்) திட்டத்தின் கீழ் சிறப்பு தூய்மை பணி முகாம் தொடக்க நிகழ்ச்சி காந்தி பூங்காவில் நேற்று நடைபெற்றது. இதில் தூய்மை பணியை கலெக்டர் அருணா தொடங்கி வைத்தார். மேலும் தூய்மை உறுதிமொழியினை கலெக்டர் தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். அதன்பின் கலெக்டர் அருணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "புதுக்கோட்டையை தூய்மையாக மாற்றுவதற்காக முதல்கட்டமாக மாநகராட்சியில் தூய்மை பாரத இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தூய்மை பணிகள் மேற்கொள்ளுதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டங்களில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில் உள்பட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கலைஞர் பூங்காவில் கட்டணம் வசூல் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தவறான தகவல் அளித்த உதவி பொறியாளர் மீது மாநகராட்சி ஆணையர் துறைவாரியான நடவடிக்கை எடுத்துள்ளார். கலெக்டர் அலுவலகத்தில் கழிப்பறை கட்டுவதற்காக பொதுப்பணித்துறையினர் நிதி ஒதுக்கியுள்ளனர்'' என்றார். இந்நிகழ்வில், புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், மாநகராட்சி ஆணையர் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.