கரம்பக்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் இரத்ததான முகாம்: 28 யூனிட் இரத்தம் சேகரிப்பு!



புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் இன்று (20.12.25) சனிக்கிழமை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.

தலைமை
இந்த முகாமிற்கு தவ்ஹீத் ஜமாஅத் கிளை நிர்வாகிகள் முகம்மது யூனுஸ், ஜாபிர் அலி மற்றும் ஆதம்ஸா ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் கரம்பக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்க முன்வந்தனர்.

சிறப்பு விருந்தினர்
மழையூர் வட்டார மருத்துவ அலுவலர் Dr. M. பஜ்ருல் அஹமது (MBBS) அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு முகாமைத் தொடங்கி வைத்தார்.


28 யூனிட் இரத்தம் சேகரிப்பு
முகாமில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு உரிய மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டது. மருத்துவத் தகுதியின் அடிப்படையில் 28 யூனிட்கள் இரத்தம் கொடையாகப் பெறப்பட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இரத்தம் வழங்கிய கொடையாளர்களைப் பாராட்டி, இரத்த வங்கி மருத்துவர் சரவணன் அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்.


நிகழ்வின் இறுதியில் கிளைத் தலைவர் முகம்மது யூனுஸ் நன்றியுரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், "ஒரு மனிதரை வாழவைத்தவர் உலக மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவர் போலாவார்" என்ற திருக்குர்ஆனின் உன்னதமான போதனையை அடிப்படையாகக் கொண்டே இத்தகைய மனிதநேயப் பணிகள் ஜமாஅத் சார்பில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

நன்றியுரை
இறுதியாக, முகாமில் சிறப்பாகப் பணியாற்றிய இரத்த வங்கி மருத்துவர் Dr. சரவணன் மற்றும் அவரது மருத்துவக் குழுவினர், இரத்தக் கொடையாளிகள், பொதுமக்கள், ஜமாஅத்தின் கிளை உறுப்பினர்கள், மாணவரணி மற்றும் தொண்டரணி ஆகியோருக்கு நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments