நாட்டின் 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) புதுக்கோட்டை மாவட்டம், ராஜேந்திரபுரம் கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் நேற்று (18.01.2026) ஞாயிற்றுக்கிழமை ராஜேந்திரபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.
தலைமை மற்றும் முன்னிலை
இம்முகாமிற்கு ஜமாஅத்தின் மாவட்டச் செயலாளர் ஜனாப். முகம்மது மீரான் அவர்கள் தலைமை தாங்கினார். கிளைப் பொறுப்பாளர் அப்துல் ரகுமான் அவர்கள் முன்னிலை வகித்து முகாம் பணிகளை ஒருங்கிணைத்தார்.
நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு
இந்த முகாமில் ராஜேந்திரபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததானம் செய்ய முன்வந்தனர். இதில் மருத்துவத் தகுதியின் அடிப்படையில் 36 யூனிட் இரத்தம் சேகரிக்கப்பட்டு, அறந்தாங்கி அரசு மருத்துவமனை இரத்த வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது.
சான்றிதழ் வழங்கல்
இரத்ததானம் வழங்கிய தன்னார்வலர்கள் அனைவருக்கும், அறந்தாங்கி அரசு மருத்துவமனை மருத்துவர் Dr. ஹேமலதா DCH அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிக் கௌரவித்தார்.
இறுதியாக, முகாமிற்கு வருகை தந்து இரத்தத்தைச் சேகரித்த இரத்த வங்கி மேலாளர் மருத்துவர் Dr. ஹேமலதா DCH மற்றும் அவரது மருத்துவக் குழுவினருக்கும், தாராளமாக இரத்தம் வழங்கிய கொடையாளர்களுக்கும், முகாம் ஏற்பாடுகளைச் செம்மையாகச் செய்த கிளை உறுப்பினர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் சபிபுல்லா அவர்கள் நன்றியுரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், "ஒரு மனிதரை வாழவைத்தவர், உலக மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவர் போலாவார்" என்ற திருக்குர்ஆனின் உன்னத போதனையின் அடிப்படையில், மனிதநேயத்தைப் போற்றும் வகையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia


0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.