அம்மாபட்டினம் ஊராட்சி மன்ற அலுவலகம் சூறையாடல்: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!




அம்மாபட்டினம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை சூறையாடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊராட்சி அலுவலகம்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மாபட்டினம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் அம்மா பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளது.

இந்த அலுவலகத்தில் ஊராட்சி செயலாளராக மகேஸ்வரி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மகேஸ்வரி தனது ஊராட்சி பணிகளை முடித்துவிட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.

சூறையாடல்

இந்நிலையில் ஊராட்சி மன்ற அலுவலக கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் அங்கிருந்த கம்ப்யூட்டர், பிரிண்டரை உடைத்தும், பதிவேடுகளை கிழித்தும் அலுவலகத்தை சூறையாடி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்த மகேஸ்வரி ஊராட்சி மன்ற அலுவலகம் சூறையாட பட்டிருப்பதை பார்த்து அதிச்சியடைந்தார். இதையடுத்து அவர் இதுகுறித்து மணமேல்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து ஊராட்சி செயலாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments