புதுக்கோட்டை மாவட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்




புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் செயல்பட்டுவரும், வட்டார இயக்க மேலாண்மை அலகில் ஒப்பந்த அடிப்படையில் வட்டார ஒருங்கிணைப்பாளராக பின்வரும் அடிப்படையில் பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் மகளிர் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், எம்.எஸ். ஆபிஸ் கணினி பிரிவில் குறைந்தபட்சம் 3 மாத கால சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கணினி பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும், 5 வருடம் மகளிர் சுய உதவிக்குழுவிலோ அல்லது ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிலோ முன் அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும், தொடர்புடைய ஒன்றியத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும், எவ்வித குறைபாடுகளுமின்றி சிறப்பாக பணி செய்தவராக இருத்தல் வேண்டும். எனவே, தகுதி உள்ளவர்கள் விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து ஒரு மூடிய உறையில் இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்கவோ அல்லது இணை இயக்குனர், திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, பூமாலை வணிக வளாகம், புதிய பஸ் நிலையம் அருகில், புதுக்கோட்டை என்ற முகவரிக்கு பதிவு அல்லது விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும். அதன் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments