தமிழகத்தில் ரமலான் மாதத்திற்கான பிறை தென்பட்டதை அடுத்து, நாளை (பிப்ரவரி 19, வியாழக்கிழமை) முதல் புனித ரமலான் நோன்பு தொடங்குவதாகத் தமிழக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு தலைமை காஜி முஃப்தி என்.பி. உஸ்மான் முஹியித்தீன் பாகவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (புதன்கிழமை, 18-02-2026) மாலை ரமலான் மாதத்திற்கான முதல் பிறை தென்பட்டது. இதனைத் தொடர்ந்து, நாளை முதல் ரமலான் மாதத்தின் முதல் நோன்பு தொடங்குகிறது.
தராவீஹ் தொழுகை
நோன்பு தொடங்குவதை முன்னிட்டு, இன்று இரவு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்புத் தொழுகையான 'தராவீஹ்' நடைபெறும்.
இறை அருளும் அமைதியும் சூழும் இந்த புனித மாதத்தில், இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் நோன்பு நோற்று, நற்செயல்களில் ஈடுபட்டு இறைவனின் அருளைப் பெற வேண்டும் என தலைமை காஜி அலுவலகம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.