புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வைரிவயல் கிராமத்தில் வீரமுனி ஆண்டவர் கோவில் சந்தன காப்பு விழாவை முன்னிட்டு குதிரை, மாட்டு வண்டி எல்கை பந்தயம் நேற்று நடைபெற்றது. பந்தயத்தில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, அறந்தாங்கி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 137 மாட்டு வண்டிகள் மற்றும் 109 குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. இதில் பெரிய மாடு போய் வர 8 மைல் தூரமும், நடுமாடுக்கு 6 மைல் தூரமும், கரிச்சான் மாடுக்கு 5 மைல் தூரமும், பூஞ்சிட்டு மாடுக்கு 4 மைல் தூரமும் நிர்ணயிக்கப்பட்டது. இதேபோல் பெரிய குதிரை போய் வர 8 மைல் தூரமும், நடுகுதிரைக்கு 6 மைல் தூரமும், கரிச்சான் குதிரைக்கு 5 மைல் தூரமும், சின்ன குதிரைக்கு 4 மைல் தூரமும் என பந்தயம் நிர்ணயிக்கப்பட்டது.
பரிசு
இதையடுத்து மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கைத்தட்டி, விசில் அடித்து சாரதிகளை உற்சாகப்படுத்தினர்.
இதனைெதாடர்ந்து குதிரை, மாட்டு வண்டி பந்தயங்களில் முதல் 3 இடங்களை பிடித்த மாட்டு வண்டி, குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு ரூ.4 லட்சம் ரொக்கம் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாட்டு வண்டியை ஓட்டிச் சென்ற சாரதிகளுக்கு கொடி பரிசு வழங்கப்பட்டது. பந்தயம் நடைபெற்ற அறந்தாங்கி-கட்டுமாவடி சாலையில் திரளான ரசிகர்கள் திரண்டு நின்று கண்டு களித்தனர். அறந்தாங்கி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.