சுற்றுலாத்துறை அமைச்சரிடம் அறந்தாங்கி முன்னாள் எம்.எல்.ஏ. மனு: கோடியக்கரை, முத்துகுடாவை மேம்படுத்த கோரிக்கை!



புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.ராஜேஷ்குமார் அவர்களை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

​அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
​அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றுலா வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, கோடியக்கரையில் புதிய சுற்றுலாத்தலம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

​மேலும், புகழ்பெற்ற ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோவிலுக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அங்கு கூடுதல் அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும்.

​அதேபோல், முத்துகுடா கடற்கரைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் சிறுவர் பூங்கா அமைப்பதுடன், அங்கு தேவையான பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

​மனுவைப் பெற்றுக்கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.ராஜேஷ்குமார், இக்கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments