கோபாலப்பட்டிணம் நெடுங்குளம் பிரதான சாலையில் ஆறு மாத காலத்திற்கு மேலாக எரியாத தெரு விளக்கை GPM மீடியா செய்தி எதிரொலியாக ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலரின் நடவடிக்கையால் ஊராட்சி நிர்வாகம் சரி செய்தது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து கோபாலப்பட்டிணத்திற்கு செல்லும் பிரதான சாலை அமைந்துள்ளது. கோபாலப்பட்டிணத்தில் இருந்து மீமிசல் செல்வதற்கும், வெளியூரில் இருந்து கோபாலப்பட்டிணம் கடற்கரை பகுதிக்கு செல்ல இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன. தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக தெரு விளக்குகள் எரியாமல் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். மேலும் இரவு நேரங்களில் பெண்களும், குழந்தைகளும் வெளியில் வருவதற்கு கூட அச்சமடைந்தனர்.
ஆறு மாத காலத்திற்கு மேலாக எரியாத தெரு விளக்கை பற்றி பலமுறை GPM மீடியாவில் செய்திகள் வெளியிடப்பட்டும் மற்றும் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும் ஊராட்சி நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. இதனையடுத்து ஆவுடையார்கோவில் ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் GPM மீடியா சார்பாக தொலைபேசி வாயிலாக புகார் கூறப்பட்டதையடுத்து ஆறு மாத காலத்திற்கு மேலாக எரியாத தெருவிளக்கை சரி செய்து 29.04.2022 அந்த பகுதியில் உள்ள அனைத்து மின் விளக்குகளும் எரியவிடப்பட்டது.
டிசம்பர் 12 2021 அன்று வெளியிடப்பட்ட் செய்தி
மார்ச் 12 2022 அன்று வெளியிடப்பட்ட் செய்தி
ஏப்ரல் 12 2022 அன்று வெளியிடப்பட்ட் செய்தி
தெருவிளக்கு எரிய உடனடியாக நடவடிக்கை எடுத்த ஆவுடையார்கோவில் ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு GPM மீடியா மற்றும் அப்பகுதி மக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துகொள்கின்றோம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.