கோபாலப்பட்டினத்தில் மலர்ந்தது இஸ்லாமிய ஜமாத் நிர்வாக சபை!!!



புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினத்தில் கடந்த ஆண்டு 08/11/2018 அன்று நிர்வாகத்தில் கருத்து வேறுபாடு நிலவியதால்  புதிய  தலைமையைக் கொண்டு இஸ்லாமிய ஜமாத் நிர்வாக சபை என்று புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டு  இரண்டு ஜமாஅத்தாக செயல்பட்டு வந்தனர்.
நான்கு மாதங்கள் தனித்தனியாக செயல்பட்டு வந்த நிலையில் ஊரில் உள்ள சில நல்லுள்ளங்கள் இரண்டு ஜாமத்தையும் ஒன்றிணைக்கும் பணியை கடந்த மார்ச் மாதம் 15/03/2019 வெள்ளிக்கிழமை மற்றும் 16/03/2019 சனிக்கிழமை இரண்டு நாட்களாக நடைபெற்ற வாத-விவாத கருத்து பறிமாற்றல்களுக்கு பிறகு இரு தரப்பு ஜமாத்தும் இணைந்து ஒரே ஜமாத்தாக செயல்படுவது என்று அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் சில நிபந்தனைகளுடன் ASM.செய்யது முஹம்மது அவர்களின் தலைமையில் இணைந்து செயல்படுவது எனவும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் சமரசம் செய்தவர்களே பின்வாங்கும் அளவுக்கு வாக்குறுதி நிறைவேற்றப்படாதனாலும், நிபந்தனையின்படி  செயல்படாதனாலும்,  இந்த நிர்வாகத்தின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக பலகட்ட ஆலோசனைக்கு பின்னர் ஊரின் நலன் கருதி மீண்டும் இஸ்லாமிய ஜமாத் நிர்வாக சபை செயல்படும் என்பதை தெரியபடுத்தி கொள்கிறோம்.

கீழ் கண்ட நபர்கள் நிர்வாகிகளாக  ஒருமனதாக தேர்வு செய்யபட்டுள்ளனர்:

தலைவர்: OSM முஹமது அலி ஜின்னா

து.தலைவர்: முஹமது மீராசா

செயலாளர்: மு. இ. கலந்தர்

து. செயலாளர்: E.M  சவுகத் அலி

பொருளாலர்: ஹாஜி M. முஹமது மீராசா

குறிப்பு: நிபந்தனை நிறைவேற்றப்பட்டு புதிய நபர்களை நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கும்  பட்சத்தில் இந்த  நிர்வாகம் உடனடியாக கலைக்கப்படும் என்ற உத்தரவாதத்தை தருகின்றோம்.

தகவல்: மு.இ. கலந்தர்  இஸ்லாமிய ஜமாத் நிர்வாக சபை செயலாளர்


கோபாலப்பட்டினம் ஜமாஅத் இணைந்தது!!!

கோபாலபட்டிணம் ஊர் மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

கோபாலப்பட்டினம் ஜமாத் நிர்வாகம் ராஜினாமா


Post a Comment

0 Comments